புதுக்கடை, டிச. 27 –
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம், கொல்லம்தட்டுவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் குட்டிக்கண் என்பவரது மகள் தங்கம் (75). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் முஞ்சிறையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
கடந்த 17.10.2025 அன்று சமையல் செய்து கொண்டிருந்த போது தங்கத்தின் உடலில் தீ பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிட்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார். இது குறித்து மூதாட்டியின் உறவினர் ஜெயசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


