நாகர்கோவில், டிச. 17 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சமீபகாலமாக கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வே போலீசார் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களி அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ரயில் நாகர்கோவில் வந்த போது ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகப்படும்படியாக பேக் காணப்பட்டது.
பேக் குறித்து ரயில் பணியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் அது குறித்து எந்த தகவலும் தெரியாது எனக்கு கூறினார்கள். உடனே போலீசார்ந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் 4 பார்சல்களில் தலா 2 கிலோ விதம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அது ரயில்வே போலீஸ் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டது.
கஞ்சாவை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரியில் ஹவுரா, திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



