போகலூர், நவ. 27 –
நவம்பர் 26ம் தேதி இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை கல்வித்தந்தை மருத்துவர் இ.எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை,
ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் ஏராளமான ஆண், பெண் வழக்கறிஞர்கள் தங்களுடைய குருதிகளை தானம் செய்தனர். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா நிகழ்ச்சியுரையாற்றினார். வழக்கறிஞர் சங்க தலைவர் k.அன்புசெழியன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலி கான் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பாளர் டாக்டர் நூர்முஹம்மது, ராமநாதபுரம் வட்டாரபோக்குவரத்து அதிகாரி ஆனந்த், இரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் மணிமொழி, தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது, அதன் நிர்வாகிகள் அப்துல் ஹமீது, அஜீஸ் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



