By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

Last updated: November 24, 2025 2:01 pm
November 24, 2025
35 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 24 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதனால் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். வாரத்தின் கடைசி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவில் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணமாக உள்ளனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஆனால் மழை மேகமூட்டம் காரணமாக சூரியன் உதய மாகும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் புனித நீராடி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. சுடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தகவல்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை!!

May 18, 2024
133 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வை
மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account