மார்த்தாண்டம், நவ. 22 –
மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி சகிலா (42). இந்த தம்பதிகளுக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு தனியார் மருத்துவமனையில் கடந்த எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடி அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கேரள மாநில தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எட்டு மாத கர்ப்பிணி பெண் சகிலா உயிரிழந்தார். எட்டு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநில தனியார் மருத்துவமனையில் உள்ள உடல் குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ப்பிணி பெண் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.



