குழித்துறை, நவ. 20 –
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர், முன்னாள் மாநில துணைத் தலைவர் சி.எஸ். கிறிஸ்டோபர், மாநில செயலாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், பேரூராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். சி. நெல்சன் நன்றி கூறினார்.
போராட்டத்தின் போது நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



