புதுக்கடை, நவ. 20 –
புதுக்கடை அருகே பரக்காணி, பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் சூசை மரியான் (74). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவ தினம் தனது வீட்டு அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கூடு கட்டு இருந்த கொடிய விஷ வண்டுகள் சூசை மரியானை தாக்கியது. இதில் அவர் வலியால் துடி துடித்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகள் மினிமோள் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


