நாகர்கோவில், நவம்பர் 10 –
குமரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த பூங்கோதை, குமரி மாவட்ட வருவாய் அலுவலராக பணி பணி மாறுதல் செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான உத்தரவு கடந்த மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பூங்கோதை கடந்த மாதம் 31ம் தேதி பணி விடுவிப்பு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கலெக்டர் அழகுமீனா மற்றும் அதிகாரிகளிடம் வாழ்த்து பெற்றார்.



