கன்னியாகுமரி, நவ. 3 –
சி.ஐ.டி.யு. 16-வது மாநில மாநாடு கோவையில் வருகிற 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடிப்பயணம் தொடக்க விழா கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்தது.
சி.ஐ.டி.யு மாநில செயலாளர் தங்கமோகனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராசல், ஸ்டாலின்தாஸ். சரவண பெருமாள், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் அந்தோணி வரவேற்று பேசினார்.
இந்த கொடி பயணத்தை மாநில செயலாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த கொடியினை அகில இந்திய துணை தலைவர் பத்மநாபன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பெல்லார்மின் உள்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த கொடி பயணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி வழியாக வருகிற 6-ஆம் தேதி கோவை சென்றடைகிறது.



