தென்காசி, அக்டோபர் 30 –
தென்காசி மலையான் தெருவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலையான் தெருவில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன், பூமாதேவி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன், மலையான்தெரு சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இசக்கி ரவி மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



