களியக்காவிளை, அக். 27 –
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மகிந்த் மற்றும் போலீசார் களியக்காவிளையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த வாலிபர் களியக்காவிளை துண்டு விளை புத்தன் வீட்டை சார்ந்த சலீம் மகன் அஜ்மல் (29) என்பது தெரிய வந்தது. அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


