சுசீந்திரம், அக். 23 –
ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர் திலிப் பெகாடியா (28). இவரை அசாம் மாநிலத்தைச் சார்ந்த நசீர் லிடின் (28) என்பவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு நாகர்கோவில் அருகே உள்ள நைனார் புதூர் வலை கம்பெனியில் வேலைக்கு சேர்த்து உள்ளார். சம்பவ நாளன்று திலிப் பெகாடியா வேலை முடித்து தான் தங்கும் அறைக்கு வந்துள்ளார். திடீரென அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
அருகே இருந்தவர் மாத்திரை வாங்கி வருவதற்காக வெளியே சென்று மாத்திரை வாங்கி விட்டு வந்து பார்க்கும் பொழுது அவர் சுயநினைவு இல்லாமல் கிடந்து உள்ளார். உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நசீர் லிடின் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


