சங்கரன்கோவில், அக். 23 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது: வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுகவினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பராசக்தி, ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



