தென்தாமரைகுளம், அக். 13 –
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு
நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் ஸ்ரீனிவாஸ் தலைமை உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா சிறப்புரை ஆற்றினார்.
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜலிங்கம் சிறப்புரையாற்றினார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகாக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருக்கான விருதினைச் சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா வழங்கி சிறப்புச் செய்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பவானி நன்றியுரை கூறினார். இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்வினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அ. வெளியப்பன் ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.



