சுசீந்திரம், அக். 13 –
நாகர்கோவில் அருகே உள்ள வட்ட விளை பிள்ளையார் கோவில் தெருவை சார்ந்தவர் கணேஷ் ராஜா (44). இவர் குத்துவிளக்கு தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. எப்பொழுதும் மிகவும் அமைதியாகவே இருந்து வந்துள்ளார். சில வேளைகளில் வீட்டில் இருந்து வெளியே செல்பவர் வீட்டிற்கு ஒரு இருநாட்களில் வந்துவிடுவார். அதுபோல கடந்த 9ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
வீட்டிற்கு அவர் வந்து விடுவார் என நினைத்திருந்த நிலையில் நேற்று மதியம் சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மனைவி லதா (40) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் லதா சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவம் இடம் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


