ஈரோடு, அக். 11 –
ஈரோடு ஊராட்சி ஒன்றியக்கு உட்பட்ட எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. காளிங்கராயன்பாளையம் ராஜா கலையரங்கத்தில் நடந்த இந்த முகாமில் மூலப்பாளையம், வீர சிவாஜி நகர், எல்லப்பாளையம், சத்யா நகர், பெருமாபாளையம் உள்பட 13 குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
இதில் கலைஞர் உரிமைத் தொகை ஆதி திராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மின்சார துறை தொழிலாளர் நல வாரியம் வீட்டு வசதி வாரியம் உட்பட 15 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். இதில் ஈரோடு தாசில்தார் முத்து கிருஷ்ணன், ஈரோடு வட்டார வளர்ச்சி அதிகாரி அம்புரோஸ், துணை ஆணையாளர் பொற்கொடி உள்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



