திருவெண்ணெய்நல்லூர், அக். 07 –
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்தினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மாணவர்களுடன் பஸ்ஸில் பயணம் செய்து உற்சாகப்படுத்தினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பணிமனை 1-ல் 360பி மற்றும் விழுப்புரம் பணிமனை 2-ல் 135ஏ உளுந்தூர்பேட்டை பணிமனை T2இ ஆகிய பணிமனைகளின் மூலம் 3 வழித்தடங்களில் மாணவர்களுக்கு பேருந்து வசதியினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் பஸ்ஸில் கல்லூரி மாணவர்களுடன் சிறிது தூரம் பயணம் செய்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.
இதில் முன்னாள் எம்.பி., பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், நகர செயலாளர் பூக்கடை கணேசன், துணைத் தலைவர் ஜோதி, கல்லூரி முதல்வர் இந்திரா, போக்குவரத்து பொது மேலாளர் ஜெய்சங்கர், உதவி மேலாளர் சிவராமன், கிளை மேலாளர்கள் முருகன், விமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தவச்சலம், கிருஷ்ணமூர்த்தி, சடகோபன் மோகன்ராஜ், சுதா சீனிவாசன், ஏழுமலை, நிர்மல்ராஜ், விசுவநாதன், கிருஷ்ணராஜ், அன்பழகன், வெங்கடேசன், சி.டி. பாலு, சுந்தரமூர்த்தி, மேகலா சதீஷ், பீரங்கி குணா, பாலாஜி, சந்துரு, பரசுராமன், குமரவேல், நாவப்பன், சோமசுந்தரம், கேசவன், ஜெயபால், சிவஞானம், பிரபு, அன்பழகன், ஜெயராமன், பழனிச்சாமி, முத்து, சரவணன், ரமேஷ், தல.சித்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



