உடுமலை, அக். 06 –
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூர் மாவட்டம் உடுமலை சின்ன வீராம்பட்டியில் உடுமலை தொகுதி தலைவர் தாயம்மாள் ஏற்பாட்டில் புதிய உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் இணைந்தனர். இதில் பொது மக்களுடைய குறைகள் மனுவாக பெற்று கொள்ளப்பட்டது. அதை பரிசீலனை செய்து நிறைவேற்றித் தருமாறு உறுதி அளித்தும் ஆண், பெண் இருபாலருக்குமான இலவச சிறுதொழில் பயிற்சி, சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இதில் தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு தலைவர் சேர்மன் முனைவர் ஏ. ரஃபிக், தேசிய பொதுச் செயலாளர் சேவாரத்னா விஜயலட்சுமி, தேசிய செயலாளர் யுவராஜ், மாநில துணைத்தலைவர் சித்ரா, மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் உமைபா, நாமக்கல் மாவட்ட தலைவர் குணசேகரன் மகளிர் அணி தலைவி கவிதா, கோவை மாவட்டம் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் வித்யா, உடுமலை தொகுதி ஆலோசகர் அம்சவேணி, ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, அமுதா காயத்ரி, உடுமலை தொகுதி பஞ்சாயத்து தலைவர் உடுமலை தொகுதி முன்னாள் கவுன்சிலர் சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



