விளாத்திகுளம், அக்டோபர் 04 –
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லம்பரம்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர் திமுக ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், இமானுவேல், கொல்லம்பரம்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன், திமுக கிளைச் செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



