திருச்சி, அக்டோபர் 04 –
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பது இதன் நோக்கமாகும்.
மேலும் நாட்டின் நலன் சார்ந்த இந்த குறிக்கோளை வலுப்படுத்துவதற்காகவும், இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தவும் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப்படுகின்ற பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. 2025 அக்டோபர் 21-ஆம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 KT என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும் போது பூஜ்ய (0%*) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது.
தேச நலன் மீது அக்கறையுடன் சுயசார்பை ஆதரிக்கும் இந்த சிறப்பான முயற்சியில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை இத்திட்டத்தின் மூலம் தனிஷ்க் எளிதாக்கியிருக்கிறது. இது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: “ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒருங்கிணைந்த ஒன்றாக தங்கம் இருக்கிறது. பல தலைமுறைகளாக அன்புடன் வழங்கப்படும் தங்கம், பரிசாக வழங்கப்பட்டு, இனிய நினைவுகளோடு போற்றப்படுகிறது; அனைத்து குடும்பங்களும் சார்ந்திருக்கும் ஒரு பொருளாதார சக்தியாகவும் இது இருக்கிறது. தனிஷ்க் -ன் தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், இந்த பாரம்பரியத்தை நேர்த்தியாக புதுப்பிக்க ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான வழிமுறையை குடும்பங்களுக்குத் தருகிறது. இந்த ஒவ்வொரு பரிமாற்றமும் கடந்த கால பழைய ஆபரணங்களை, இன்றைய காலத்திற்கேற்ற நவீன வடிவமைப்புகளாக மாற்றுவதோடு தங்க இறக்குமதிகள் மீது நமது நாடான இந்தியாவை சார்ந்திருப்பதை குறைப்பதனால் ஒரு மிகப்பெரிய இலட்சியத்திற்கும் பங்களிப்பை வழங்குகிறது என்று கூறினார்.



