திருப்புவனம், அக். 01 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு முன்னதாக 142 ஆதி திராவிட பட்டியல் இன மக்களுக்கென ஒதுக்கித் தந்திட்ட புல எண் 56 ல் 1 C இடத்தை தலா 3 சென்ட் வீதம் அளவீடு செய்து ஒதுக்கித் தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம ஆதிதிராவிடர் பட்டியல் இன மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இந்த பேரணியின்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட தலைவர் முத்துராமலிங்கபூபதி, மாவட்ட செயற்குழு அய்யம்பாண்டி, ஊராட்சி மேனாள் தலைவர் மகாலிங்கம், பொருளாளர் வீரையா, மாவட்ட செயலாளர் சக்திவேல், தன்னார்வலர் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பூவந்தி சரவணன் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



