சிவகங்கை, செப். 5 –
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்விக்கடன் முகாம்கள் நடத்துவது தொடர்பாக வங்கிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்/துணைவேந்தர்கள் மற்றும் குறிப்பிட்ட கல்லூரிகளின் பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர்களுக்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மாணாக்கர்களுக்கு கல்வி கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துகழுவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



