திருவெண்ணெய்நல்லூர், செப். 27 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10-வது பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலை வேளாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர். விசுவநாதன், ம. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கரும்பு அலுவலர் வில்லியம் அந்தோணி அனைவரையும் வரவேற்றார். கணக்கு அலுவலர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் 2025ஆண்டு வரை நிர்வாக தணிக்கை அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரும் ஆண்டு முதல் அரவை பருவத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் கரும்பு வெட்டும் உத்தரவு வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதில் பொறியாளர் செந்தில் குமார், ரசாயனார் பாலசுப்பிரமணியன், கரும்பு பெருக்கு அலுவலர் தாமரைச் செல்வி, விவசாய சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பக்தவச்சலு, ஜோதிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



