கன்னியாகுமரி, செப். 24 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா மற்றும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா ஆகிய 2 பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த திருவிழா காலங்க ளில் 10 நாட்களும் அம்மனுக்கு நடைபெறும் அபிஷே கத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து அர்ச்சகர் பகவதி அம்மன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவுக்கு வனத்துறையின் சில கட்டுப்பாடுகளின் காரணமாக யானை பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் குமரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 48 கிராம ங்களை சேர்ந்த பொது மக்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு யானை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இந்த 10 நாட்களும் காலை 10மணிக்கு நடக்கும் அம்ம னுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேள தாளங்கள் முழங்க அர்ச்சகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
முன்னதாக விவேகானந்த புரம் சக்கர தீர்த்த காசிவிசு வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளி க்குடத்தில் புனிதநீர் எடுத்து காசி விஸ்வநாதர் முன்பு வைத்து பூஜை நடத்தப்ப ட்டது. அதன்பிறகு கோவில் முன்பு நிறுத்தி வைத்திருந்த யானைக்கு கஜபூஜை நடத்தி தீபாராதனை காட்டப்ப ட்டது.
அணிவித்து அதன்பிறகு நெற்றிப்ப ட்டம் அலங்கரிக்கப்பட்ட யானை மீது வெள்ளிக்குடத்தில் புனிதநீர்வைத்து கன்னியாகு மரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த யானை மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் எம். எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம் ஆர் . காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணை தலைவர் அனுமந்த ராவ், பா.ஜ., மாவட்ட தலைவர் கோபகுமார், மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ்,அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு,நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணை தலைவர் ஜெனஸ்மைக்கேல், ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீ ஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் இக்பால், சிவசுடலைமணி, ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மாவட்ட பா.ஜ.க. தலைவர் கோபகுமார். முன்னாள் தலைவர் தர்மராஜன், பா.ஜ.க. நிர்வாகி குமரி சிவா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், தி.மு.க. நிர்வாகிகள் தாமரை பிரதாப், ஆனந்த், கெய்சர்கான், அன்பழகன், பிரைட்டன், தே.மு.தி.க. மாநில சமூக வலைதள அணி துணை செயலாளர் வக்கீல் சிவகுமார், நாக ப்பன், மாவட்ட செயலாளர் அமுதன், காசிவிஸ்வநாதர் கோவில் பக்தர்கள் சங்க நிர்வாகிகள் அஜய், நாகராஜன், மாவட்ட அ.தி. மு.க. வர்த்தக அணி பொருளாளர் பகவதிய ப்பன், தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்த் தாமஸ்ஷியாம். கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் பாலன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகன், மாநில விசுவ இந்து பரிஷத் துணை அமைப்பாளர் காளியப்பன், மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணை செயலாளர் பொருளாளர் தங்கவேல் உள்பட திரளான பக்தர்கள்
இந்த ஊர்வலம் ரெயில்நிலைய சந்திப்பு, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, தெற்குரதவீதி, சன்னதிதெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது



