ஈரோடு, செப். 24 –
ஈரோட்டை அடுத்த பேரோடு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலைஞர் உரிமைத் தொகை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சார துறை, தொழிலாளர் நல வாரியம், வீட்டு வசதி வாரியம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
இந்த முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு தாசில்தார் முத்து கிருஷ்ணன், ஈரோடு யூனியன் ஆணையாளர் அம்புரோஸ், துணை ஆணையாளர் பொற்கொடி, செயலாளர் ரேவதி, ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



