கிருஷ்ணகிரி, செப். 24 –
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி, திப்பனப்பள்ளி கிராமத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



