குளச்சல், செப். 22 –
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025 – 26 நகராட்சியின் 23-ம் வார்டு மரமடி பகுதியில் மீனவர்களுக்கு ஓய்வு அறை கட்ட வேண்டி மீனவர் காங்கிரஸ் சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.எ-விடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று அடிக்கல் நாட்டிய குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற தலைவர் நசீர், 23.ம் வார்டு கவுன்சிலர் ஜாண்பிரிட்டோ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், சாமுவேல் வேல் சேகர், மீனவ காங், மாவட்ட தலைவர் ஸ்டார்வின், துணை தலைவர் லாலின், ஷாபி, தர்மராஜ்,மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



