ராமநாதபுரம், செப். 16 –
தமிழக அரசால் வரும் அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் கருத்தரங்கத்தை கோவையில் நடத்துகிறது. இதனை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தெரிந்து கொள்ள செய்யது அம்மாள் இன்குபேசன் மற்றும் இன்னோவேசன் கவுன்சில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இப்போ பே நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான மோகன் கருப்பையா கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த தானே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தும் போது நீங்கள் என்னை விட நிறைய சாதிக்கலாம் என்று கூறினார்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தூத்துக்குடி மண்டலத்தின் தலைவர் ஜிஜின் கோவையில் நடக்கும் மாபெரும் கருத்தரங்கை பற்றி எடுத்து கூறினார். டாக்டர் சின்னத்துரை அப்துல்லா இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து கூறினார்.பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.



