தருமபுரி, செப்டம்பர் 15 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அஷ்டமி முன்னிட்டு பக்தர்கள் நெய் தீபம், எலுமிச்சை பழம் தீபம், தேங்காய் தீபம், ஷாம்பூசணிக்காய் தீபம் ஆகிய தீபங்களை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



