தேனி, செப். 10 –
கேரளா சென்ற பேருந்து விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம். மின்சாரம் இன்மையாலும் ஓட்டுனரின் முயற்சியால் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக நெடுங்கண்டம் செல்வதற்காக அரசு வாகன ஓட்டுனர் பாலமுருகன் என்பவர் பேருந்தில் கம்பம் மெட்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர் பாராதவிதமாக எதிரில் வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக சாலையில் ஓரத்தில் இருந்து மின் கம்பங்கள் மீது மோதியதில் ஐந்து மின்கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்தது.
மேலும் ஓட்டுனரின் துரிதமான செயலாலும் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும் பெரும் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு பயணிகள் யாவரும் காயம் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளாலும் தமிழகத்தில் வரும் டிப்பர் லாரிகளாலும் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கம்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் போது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.



