திருப்பத்தூர், செப். 8 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி அடுத்த ஜங்குமபுரத்தில் காதணி விழா நடைபெற்றது. செல்வராஜன் – ரேணுகா, சென்னை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு – ஹேமலதா ஆகியோரின் குடும்ப விழாவான வசந்ராஜ் தீபிகா ஸ்ரீ இவர்களின் குழந்தையான அவியுக்தாவுக்கு காதணி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார் சங்கர் – ஜெயந்தி ஆகியோர் இணைந்து சென்னை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பெங்களூர் மஞ்சு, மாலா மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.



