தருமபுரி, செப்டம்பர் 08 –
தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கரின் சாதனைகள் குறித்த நூலை புலவர் ஞானசம்பந்தம் வெளியிட்டார். தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் ஏழை மாணவர்களுக்கு பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கி இதுவரை 110 பேர் மருத்துவராகவும், 363 பேர் பொறியாளராகவும், 75 பேர் வேளாண் பட்டதாரிகளாகவும் உருவாகியுள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் புளி வணிகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி அரசு சார்பில் புளி வணிக மையம் அமைப்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேலும் கல்வித்துறையில் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.
இவரது சாதனைகளை விளக்கி ‘பாஸ்கர் தி அதிசய மேன்’ என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தருமபுரி பச்சமுத்து மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் சசிகலா பாஸ்கர், துணை தலைவர்கள் சங்கீத்குமார், அரங்கநாதன், இயக்குனர்கள், சங்கீதா புஷ்பசேகர், பிரியா சங்கீத்குமார், இன்னிசை அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகன துர்கா வரவேற்று பேசினார். நூல் தொகுப்பாசிரியர் சிகரம் சதீஷ் ‘பாஸ்கர் தி அதிசய மேன்’ நூலின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.
விழாவில் புலவர் ஞானசம்பந்தம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார். விழாவில் தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு ரூ.50,000 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி பெற்று மருத்துவம், பொறியாளர் உள்ளிட்ட உயர்கல்வி படித்த மாணவ, மாணவிகள் பாஸ்கரின் சேவைகளை பாராட்டி பேசினார்கள்.
விழாவில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் நன்றி தெரிவித்து பேசுகையில்: ஆண்டுக்கு 25 ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை 10 ஆண்டுகளுக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படும். இதேபோன்று தாய் தந்தை இழந்த 100 ஏழை மாணவிகளுக்கு எங்களது கல்லூரியில் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும். எங்களது அறக்கட்டளை மூலம் மருத்துவம் படித்த மாணவர்கள் பணிபுரிய விரைவில் பல்லோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
இதில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், புளி வணிகர்கள் உள்பட 7 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.



