அக். 24
திருப்பூர் மாவட்டம்.
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .கிறிஸ்து ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை , உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர் மற்றும் காவல் துறையினர் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அருகிலுள்ள பெட்டி கடைகள், TASMAC பார் கடைகள் மற்றும் TASMAC ஐ சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது கடந்த இரண்டு வாரங்களில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 80 கடைகளும் பூட்டி மூடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.21,25,000 (ரூபாய் இருபத்தொன்று லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி 80 உணவு வணிகர்களில் 75 உணவு வணிகர்கள் மீது முதல் முறை குற்றத்திற்க்காகவும் மீதமுள்ள 5 உணவு வணிகர்கள் மீது இரண்டாம் முறை குற்றம் இழைத்ததற்க்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அபராதத்தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின்னனு பணபரிவர்த்தனை (e challan) வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில், பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்டி கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக
9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது
TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.