மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய கீழவீதியில் பட்டரை ஆனந்த் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவரின் சீறிய முயற்சியால் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் 7-ம் ஆண்டாக நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. நீர்மோர் பந்தலை மயிலாடுதுறை நகர மன்ற தலைவரும் தி.மு.க நகர செயலாளருமான குண்டாமனி (எ) செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க நகர செயலாளர் செந்தமிழன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி, சர்பத் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன், நகரமன்ற உறுப்பினர்கள் சதிஷ், ஆனந்த், காந்திராஜா, தனலெட்சுமி அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



