தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அடுத்த கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் அந்தோணி, அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன் ஆல்வின் ஆண்டோ டேனியல் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல்நிலை மிக மோசமான நிலையில் பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். சிறுவனின் தாயார் கல்லீரல் தானம் செய்வதாக தெரிவித்தார். மருத்துவ குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றினார்கள்.இது குறித்து சிறுவனின் தந்தை மற்றும் மருத்துவ குழுவினர் கூறியதாவது.மரபணு நோயால் கல்லீரல் முழுமையாக செயலிழந்தது ரத்தத்தில் கலந்த தாமிரம் மாற்றம் செய்ய ப்பட்டது.கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்மா டயாலிசிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயாரின் கல்லீரல் தானம் மூலம் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.இதில் அறுவை சிகிச்சைக்காக 27 லட்சம் மற்றும் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கு 50 லட்சம் வரை செலவு செய்ததாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். கல்லீரல் செயல்படும் இறுதி கட்டில் இருந்த சிறுவனின் உயிரை தாயின் கல்லீரல் தானம் மூலம் காப்பாற்றியதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics