மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு திறன் போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவிகள் ஒன்றிணைந்து யோகாசன கலையுடன் பரதநாட்டியத்தை இணைத்து ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிவதாண்டவம் பாடலுக்கு பத்மாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சர்வம் ஆசனம் உள்ளிட்ட பல்வேறு கடினமான ஆசனங்களை மாணவிகள் செய்து காட்டிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



