தேனி
மாட்டுத் தீவனம் விற்கும் கடையில் பதிக்க வைக்கப்பட்டு இருந்த 35 கிலோ குட்கா பறிமுதல்.
கடை உரிமையாளர் கைது செய்து விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தனிப்படை அமைத்து தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சேக் தாவூத் என்பவர் மாட்டு தீவனங்கள் விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் மாட்டு தீவனம் விற்பனை செய்யப்படும் கடையில் சோதனை நடத்திய போது கடையின் மேல் மாடியில் இரண்டு மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட மூடைகளில் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை மற்றும் கூலிப் உள்ளிட்டவைகள் மொத்தம் 35 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர். மேலும் மாட்டு தீவனம் விற்பனை கடை உரிமையாளர் ஷேக் தாவூத்தை கைது செய்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட ஷேக் தாவூத் மீது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.