சிவகங்கை: பிப்:02
சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது . அரசு மதுபானக் கடையின் விற்பனையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்றால் அதில் 3 – ஆயிரம் ரூபாயை மாவட்ட டாஸ்மாக்
அலுவலகத்திற்கு கமிஷனாக கொடுக்க வேண்டுமாம் .
இந்தத் தகவலை விற்பனையாளர்கள் வெளியில் சொன்னால் வேறு காரணங்களைக் -காட்டி பணி நீக்கம் செய்து விடுவோம் என்ற மிரட்டலும் இருப்பதாக கூறப்படுகிறது . இந்த கமிஷன் தொகைகளை வசூல் செய்வதற்கு பகுதி வாரியாக10 – க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருக்கிறார்களாம் . புரோக்கர்களாக செயல்படுபவர்கள் பெரும்பாலும் சூப்பர்வைசர்கள் தான் என்றும் , அவர்கள் பெரும்பாலும் அவர்களுக்குரிய பணிக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் .
இவர்களை நிர்வாகிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மாவட்ட மேலாளர் எதையும் கண்டு கொள்ளவில்லை என்றும் தெரிகிறது .
மாவட்ட மேலாளருக்கு டிரைவராக இருப்பவர் கள்ள வசூல்களை ரகசியமாகவும் , மிகக் கச்சிதமாகவும் முடித்து வருவதாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் , கண்டன சுவரொட்டிகளையும் ஒட்டி டாஸ்மாக் ஊழல்களை வெளிப்படுத்தி வருவதும் சிவகங்கையில் தொடர்ந்து நடந்து வருகிறது .