தருமபுரியில் கன்னியாகுமரியில் 133-அடி அய்யன் திருவள்ளுவர் சிலை திறந்து 25- ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மாலை அணிவித்து, மலர் துாவி மரியதை செலுத்தினார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி, வட்டாட்சியர் சண்முக சுந்திரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.