திருப்பூர், மார்ச் 26 –
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் மாநகராட்சி, தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு. ஏற்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 101 தாராபுரம் (தனி), 102 காங்கேயம், 112 அவிநாசி (தனி), 113 திருப்பூர் (வடக்கு), 114 திருப்பூர் (தெற்கு), 115 பல்லடம், 125 உடுமலைப்பேட்டை, 126 மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, இணை இயக்குனர் (வேளாண்மை) எம். ஆதிசாமி, துணை இயக்குனர் (வேளாண் விற்பனை வணிகம்) எஸ்.சண்முகசுந்தரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதிஸ்குமார், வேளாண் விற்பனை சங்க செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.மீனாம்பிகை, விவசாயி வியாபாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உள்ளனர்.



