தஞ்சையில் இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழா
முரசொலி எம்.பி. பங்கேற்பு
தஞ்சாவூர், அக். 9
தஞ்சையில் நடந்த இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழாவில் முரசொலி எம்.பி. கலந்து கொண்டார்.
தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 13-ம் தெருவில் உள்ளஅருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையில் இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. காலையில் துர்கா சுரேஷ், முத்துலட்சுமி ஆகியோரின் இறை வணக்கத்து டன் விழா தொடங்கியது.
விழாவிற்கு பிரீஸ்ட் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் மகேசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தம்பையா அனைவரையும் வரவேற்றார். குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி பேராசிரியர் தமிழடியான், வேதாரணியம் டாக்டர் சிவக்கண்ணு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். மாலை தமிழ் முறை வழிபாடு மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நீலகண்டன், சுப்புராயன் குழுவினரின் நாதஸ்வரம் மங்கள இசை நடைபெற்றது. ஓதுவார் ரவிக்குமார் குழுவினர் தமிழ் முறை வழிபாடு செய்தனர். அன்பழகன் திருமுறை ஓதினார். நிறைவாக மலேசிய இராமசாமி ஆறுமுகம் நன்றி கூறினார். தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.