மயிலாடுதுறை மே 1
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆடியபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி(25) இவர் கடந்த 2020ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சஞ்சீவியை கைது செய்தனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சிறுமிக்கு பாலியல்தொல்லை கொடுத்த சஞ்சீவிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனையடுத்து போலீசார் சஞ்சீவியை கைது செய்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர் இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.