தஞ்சாவூர். டிச. 6.
தஞ்சாவூரில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அனுப்பி வைத்தார்
தமிழகத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதில் விழுப்புரம் கடலூர், தர்மபுரி, திருவண்ணாம லை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின் றன. அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூபாய் 20 லட்சத்து 47 ஆயிரத்து 100 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப் பட்டது
இதில் அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு, சர்க்கரைதலா 1 கிலோ, சமையல் எண்ணெய், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் தூள், ரசப்பொடி, கடுகு, சீரகம். மிளகு, வெந்தயம் மஞ்சள் தூள், டீ தூள், காப்பித்தூள் கோதுமை மாவு, புளி தீப் பொட்டி உள்ளிட்ட 19 பொருட்கள் அடங்கிய பைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப் பட்டன.
இதனை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழியனுப்பி வைத்தார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் செயற்பொறியாளர் செல்வராஜ் மட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்