வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்
ஆரல்வாய்மொழி, டிச.18:
தோவாளை வடக்கூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே 20 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்
தோவாளை வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே மாதவன்நகர் பகுதி உள்ளது இப்பகுதிக்கு செல்வதற்கு முன்பாக விளையாட்டு மைதானமும் உள்ளது இந்த விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவில்லை.இந்நிலையில் நேற்று மாலை மாதவன்நகர் பகுதியை சார்ந்த சிலர் நடந்து விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது விளையாட்டு மைதானத்தில் பெரிய பாம்பு ஒன்று நெழிந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக பொதுமக்கள் தோவாளை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாணு விடம் தகவல் தெரிவித்தனர்.தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர் உடனடியாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மாவட்ட வன அதிகாரியின் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வன சரகர் அறிவுறுத்தலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் விளையாட்டு மைதானத்தில் கிடந்த பாம்பினை லாபகமாக பிடித்தனர் பிடிபட்ட பாம்பானது மலைப்பாம்பு என தெரியவந்தது சுமார் 20 அடி நீளமும் 30 கிலோ எடையும் இருப்பதாக கூறப்படுகிறது தினமும் இந்த மைதானத்தில் அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் மாலை நேரத்தில் இருந்து சுமார் 8 மணி இரவு வரை விளையாடுவது வழக்கமாக இருந்து வருகின்ற
நிலையில் அந்தப் பகுதியில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு கிடந்தது அப்பகுதி இளைஞர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் வனத்துறையால் பிடிக்கப்பட்ட இம்மலைப் பாம்பினை பொய்கை அணை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது