மார்த்தாண்டம், டிச- 11
குழித்துறை ஆர். சி தெருவை சேர்ந்தவர் சுபின் (26) மீன்பிடி தொழிலாளி. சம்பவ தினம் சுபின் சாமியார் மடம் பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்த போது இரவிபுதூர் கடை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி சாஜன் (30), ராஜகுமாரன் (36) என்பவர்களுடன் கடுமையான வாய் தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் னுறுவதும் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சுபின் நண்பர் நிதின் என்பவருடன் சிராயங்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாஜன் மற்றும் ராஜகுமார் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சுபினுடைய தலையில் ஓங்கி அடித்தனர். இதை தடுக்க முயன்ற ராஜகுமாரை கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயம் இருந்த சுபினும் நிதினும் மீட்கப்பட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஷாஜன் மற்றும் ராஜ்குமார் ஆகியவர் மீது மாத்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.