By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்

Last updated: September 27, 2024 11:33 am
September 27, 2024 28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில்* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்   துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி, பாரூர், பாம்பாறு, ஒசூர் மற்றும் சூளகிரி சின்னாறு அணைகளில் மீன்வளர்ப்பு பணிகளும், கிருஷ்ணகிரி அரசு மீன்பண்ணை, பாம்பாறு அரசு மீன்பண்ணை மற்றும் ஓசூர் மீன்பண்ணைகளில் மட்டும் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவேரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 2022 -ம் ஆண்டு 1.60 இலட்சம் மீன்குஞ்சுகள் வளர்த்து தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டது. மீன் நுகர்வு அதிகரித்ததால் கூடுதலாக மீன்குஞ்சுகள் வளர்த்து ஆற்றில் விட மீனவர்கள் கேட்டக்கொண்டதற்கிணங்க, 2023 -ம் ஆண்டு 3 இலட்சம் மீன்குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது. நடப்பாண்டு 4 இலட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மீன் விதைப்பண்ணையிலிருந்து மீன் குஞ்சுகள் வாங்கி கிருஷ்ணகிரி அணை அரசு மீன்பண்ணையில் 45 நாட்கள் வளர்க்கப்பட்ட ரோகு, மிர்கால், கட்லா கல்லாசு மற்றும் சேல்கெண்டை உள்ளிட்ட 5 ரக மீன்குஞ்சுகள் 5 சென்டிமீட்டருக்கு மேல் வளர்ந்த நிலையில் அந்த மீன்குஞ்சுகள் தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் 4 இலட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி இன்று (26.09.2024) தொடங்கப்பட்டு, இன்று ஒரேநாளில் ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் மீன்குஞ்சுகள் பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன

இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாகஅழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்து சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதன் மூலம் உயிரினங்களின் உயிர்ச்சமநிலையை (Balance in) பாதுகாத்திட முடியும்.

இத்திட்டத்தினால், அழிந்து வரும் நிலையிலுள்ள மீன்களை பேணி பாதுகாத்து அதனை உற்பத்தி செய்து அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஏழை மக்களுக்கு புரதச்சத்து நிறைந்த மீன் உணவை நியாயமான விலையில் வழங்குவதும் மாவட்டத்தின் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் மீன்வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதுதான் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வள துறையின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். ஆண்டிற்கு 15 ஆயிரம் டன் அளவிற்கு மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறுகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரிக்கும். ஆறுகளில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் நிலையான மீன் உற்பத்தி மற்றும் பல்லுயிர் உற்பத்தியை பாதுகாக்க முடியும். மீன்களின் வாழ்விடம் சிதைவடைதலை தடுக்க முடியும். மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் சுற்று சூழல் அமைப்பை பேணிக்காக்க முடியும்.

மீனவர்கள் நீர்த்தேக்கங்கள் மற்றம் ஆறுகளில் மீன்பிடிக்கும் போது பயன்படுத்தும் சிறிய வலை கண்ணியின் அளவு மற்றும் கொசுவலைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மீனவர்கள் சிறிய ரக மீன் குஞ்சுகள், சினை மீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வளம் குன்றா மீன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆறுகளில் வெடிவைத்து மீன்பிடித்தல் மீன்களில் வாழ்விடத்தை சிதைப்பது மட்டுமல்லாது மீன் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிடும். மீனவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன்பிடிப்பதை தவிர்த்தல் வேண்டும். மீனவர்கள் தினசரி பிடிக்கும் மீன்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மீன்வளத்துறை துணை இயக்குநர் .சுப்பிரமணி, மீன்வளத்துறை ஆய்வாளர் .கதிர்வேல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் .பொன்னாலா, பெண்ணேஸ்வரமடம் ஊராட்சி மன்ற தலைவர் .எஸ்.மகேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்ட அளவில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள்

மதுரை அரிட்டாபட்டியில் ஸ்ரீ சித்தர் ராம தேவர் ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா

October 20, 2024 80 Views
அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத மா கா வலியுறுத்தல்
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?