ராமநாதபுரம், ஜன.21-
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் 17 – ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றிய வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மமக 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டி
கடற்கரை சாலையில் SP பட்டிணம்,பாசிபட்டிணம்,PV பட்டிணம்,MR பட்டிணம்,தொண்டி பேரூர் ,தொண்டி பழைய பேருந்து நிலையம், நம்புதாளை, வீரசங்கிலிமடம்
,தேவிபட்டிணம் ஆகிய இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் M.பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் பனைக்குளம் அசன் தொண்டியராஜ் யாண்பு இப்ராஹிம் நிசார் அஹமது ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் மமக மாநில துணை பொதுச்செயலாளர்செயலாளர் M.I.தஞ்சை பாதுஷா,தமுமுக மாநில செயலாளர் தொண்டி M.சாதிக் பாட்ஷா,தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் S.முஹம்மது ஜெய்னுலாபுதீன் ஆகியோர்கள் கலந்துகொண்டு மமக கொடியை ஏற்றி வைத்தார்கள். தொண்டி பேரூரில் பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றிவிட்டு தொண்டி பேரூர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் 15 ஆவது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி அவர்கள் தன்னை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா முன்னிலையில் இணைத்துக் கொண்டார்
இதில் மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கடற்கரை சாலையில் உள்ள பேரூர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி ஃப்ரீ நன்றி கூறினார்



