நாகர்கோவில் ஜூன் 30
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளியங்காடு சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைப்பெற்றது . கோவில் மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு சந்தணம், பன்னீர், பால் , இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது . தொடர்ந்து சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் தீபாராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்