தேனி செப்-30
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில் தனியார் மண்டபத்தில் தேசிய முன்னாள் இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட தலைவர் மணி வரவேற்புரை ஆற்றினார்.மாநிலத் தலைவர் லயன்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய தலைவர் லயன். மகாராஜன்,சட்ட ஆலோசகர் ராஜய்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.வேலூர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி,விருதுநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் கனகராஜ்,கோயமுத்தூர் மாவட்ட தலைவர் பாஸ்கரன்,திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,தேனி மாவட்ட செயலாளர் பதினெட்டாம்படி,பொருளாளர் கணபதி,துணைப் பொருளாளர் ராசய்யா,துணைச் செயலாளர் ஞானப்பழம் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னாள் ராணுவத்தினர்களின் குழந்தைகள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை வழங்கி கெளரவித்தனர். ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான அரசுத்திட்டங்கள்,உடல் நலம் காத்தல், சட்ட பற்றி விழிப்புணர்வு,இழப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்தல், இ-மெயில் மற்றும் வெப்சைட்களை கையாளுதல் போன்றவைகளை பேசினர்.மேலும் முன்னாள் ராணுவத்தினர்களின் குழுவிற்கு புதிய கட்டிடம் கட்ட நிதியுதவி வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் மாநிலத் துணைத் தலைவர் பால்பாண்டியன் நன்றி கூறினார்.முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.