ஈரோடு ஆக 28
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் கூறியிருப்பதாவது
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்
பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் 1330 திருக்குறட்பாக்களை
யும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15000 ரொக்கப் பரிசாக தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் 2024 2025 ம் நிதியாண்டிற்கான திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்திலுள்ள 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்கொண்ட பள்ளி மாணவ. மாணவியர்கள் திருக்குறள் முற்றோதல் விண்ணப்பத்தினை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 31.10.2024 ம் தேதிக்குள் ஈரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் (7 ஆம் தளம்),நேரில் அளிக்கலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.